search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்கு வங்கத்தில்"

    பா.ஜனதாவின் ரத யாத்திரையால் கலவரம் ஏற்படும் என்று மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #BJP #MamataBanarjee

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி ஜனநாயகத்தை காப்போம் என்ற ரத யாத்திரையை மாநிலம் முழுவதும் நடத்த பா.ஜனதா திட்டமிட்டது.

    ஆனால் இந்த யாத்திரை நடந்தால் அமைதிக்கு குந்தகம் ஏற்படும், யாத்திரை செல்லும் இடங்களில் வன்முறை நடக்கும் என்று உளவுத்துறை மேற்கு வங்காள அரசை எச்சரித்தது. இதை தொடர்ந்து பா.ஜனதா ரத யாத்திரைக்கு முதல்-மந்திரி மம்தாபானர்ஜி அனுமதி மறுத்தார்.

    இதையடுத்து கொல்கத்தா ஐகோர்ட்டில் பா.ஜனதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஒரு நீதிபதி கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கினார். இதை தொடர்ந்து இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா செய்ய தொடங்கியது.

    ஆனால் இதை எதிர்த்து மேற்கு வங்காள அரசு அப்பீல் செய்தது. இந்த வழக்கில் பா.ஜனதா ரத யாத்திரைக்கு தடை விதித்தது. உளவுதுறை அறிக்கையை தீவிரமாக ஆய்வு செய்த பின் முடிவு எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. தற்போது சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் பா.ஜனதாவின் ரத யாத்திரை மதத்தை வளர்க்காது. கலவரத்தை தான் ஏற்படுத்தும் என்று மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-

    இஸ்கான் அமைப்பினர் நடத்திய ரத யாத்திரையில் நான் பங்கேற்று இருக்கிறேன். இது பகவான் ஜெகநாதர் யாத்திரை. மக்களை ஒன்று திரட்ட நடத்தப்படும் யாத்திரையாகும்,

    ஆனால் ரத யாத்திரை நடத்துவது மக்களை கொல்வதற்கு அல்ல. ரத யாத்திரை என்றால் மக்களை கொல்வது என்று பொருள் அல்ல. வன்முறை யாத்திரை அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    பா.ஜனதாவினர் ரத யாத்திரை கலவரத்தைதான் ஏற்படுத்தும். மதத்தை வளர்ப்பதற்கான யாத்திரையாக இது இருக்காது.

    இவ்வாறு மம்தா பானஜி கூறியுள்ளார். #BJP #MamataBanarjee

    மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை செய்யும் குழுக்களுக்கு அரசு நிதி உதவி அளிக்க கோர்ட் தடை விதித்திருப்பதால் முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சி அடைந்துள்ளார். #BJP #MamataBanerjee
    கொல்கத்தா:

    மேற்கு வங்கத்தில் ஆண்டு தோறும் நவராத்திரியை முன்னிட்டு துர்கா பூஜை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    மும்பையில் விநாயகர் சதுர்த்தி சமயத்தில் விநாயகரை வழிபடுவதற்கு ஏராளமான குழுக்கள் அமைக்கப்படுவது போல கொல்கத்தாவிலும் துர்க்கை வழிபடுவதற்கு பல்லாயிரக்கணக்கான குழுக்கள் அமைக்கப்படுவது உண்டு.

    இந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையை கொண்டாட மாநில முழுவதும் 28 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அந்த குழுக்கள் தங்களுக்கு அரசு சார்பில் உதவிகள் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

    மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அதை ஏற்று துர்கா பூஜை குழுக்களுக்கு நிதி உதவி அளிப்பதாக அறிவித்தார். ஒவ்வொரு குழுவுக்கும் பூஜைகள், வழிபாடுகள் செய்ய தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார்.

    துர்கா பூஜை குழுக்களுக்கு உதவுவதால் மேற்கு வங்க அரசுக்கு ரூ.28 கோடி செலவிடப்படும் என்றும் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து துர்கா பூஜை குழுக்கள் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    துர்கா பூஜைக்கு அரசு சார்பில் உதவி செய்யப்படுவதற்கு கொல்கத்தாவைச் சேர்ந்த வக்கீல் சவுரப் தத்தா எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது துர்கா பூஜைக்கு அரசு சார்பில் நிதி உதவி செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    செவ்வாய்க்கிழமை வரை இது தொடர்பாக எந்த வித அடுத்தக்கட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேற்கு வங்க மாநில பா.ஜ.க.வும் ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்றுள்ளது. மம்தாபானர்ஜி வேண்டுமென்றே இந்துக்கள் வாக்குகளை பெறுவதற்கு இப்படி பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டார். அவருக்கு கோர்ட்டு தக்க பாடம் அளித்துள்ளது என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறினார்கள். #BJP #MamataBanerjee
    ×